/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

தாமிரபரணி

இது பாதம் பயணித்த...பயணிக்கும்...பயணிக்க... வேண்டிய பாதை...

My Photo
Name:
Location: திருநெல்வேலி, தமிழ் நாடு, India

பிறந்தது:- சிவஞானபுரம். வளர்ந்தது:- ஆவரைகுளம். பொழுது கழிந்தது:- மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்த என் காணியாறு விளை. தற்போது:- காவிரிக்கரை.

Sunday, December 10, 2006

நண்பர்களின் இரத்த வேட்டை...

ஞாயிற்றுக் கிழமைண்ணாலே நமக்கு கொண்டாட்டம் தான்.

காலைல 10.00 மணிவரைக்கும் தூக்கம்...அப்புறமா மெதுவா எழுந்து அன்பான பொண்டாட்டி கையால அருமையான “டீ”...

பல்லு துலக்கறது பற்றி கேட்கறீங்களா?...

அட ஆடு, மாடுக என்ன பல்லா துலக்குது... டீ குடிக்கற வரையாவது அத சும்மா இருக்க விடுவோமே!...

அப்புறமா குளிக்கிறது...முகச்சவரம்...எல்லாத்துக்குமே ஒய்வுதான்...காரணம் சோம்பல் இல்லீங்க...

ஒரு நாள் வாரத்துல ஒரே ஒரு நாள் நாமும் தான் சோப்புக்கும் பிளேடுக்கும் ஓய்வு கொடுப்போமே என்கிற நல்ல எண்ணம் தான். ஆமா... ஓய்வு நமக்கு மட்டும் இருந்தா போதுமா?...அதுகளுக்கும் வேண்டாம்?...

அப்புறமா நமக்கு நண்பர்கள் ஜாஸ்திங்க...எப்பப் பாருங்க நம்மள சுத்தி பாடிகிட்டே இருப்பானுக...பொல்லாத பசங்க...ஒரு நிமிசம் கண்ணசந்தாலும் பிச்சி எடுத்துடுவானுங்க...அவ்வளவு குசும்பு.

நண்பர்கள பற்றி அப்புறமா சொல்ரேன்...இன்றைய கதாநாயகர்களே அவங்க தான்...அதுக்குமுன்ன கொஞ்சம் ஞாயிற்றுக்கிழமை ரொட்டீனுக்கு வர்ரேன்...

10.30க்கு நம்ம வீட்டு முட்டாள் பெட்டிக்கு (சத்தியமா நான் சொல்லலங்க...நம்ம பெரியவரு ஒருவர் சொன்னத சின்ன வயசுல கேட்ட ஞாபகம்.) முன்னாடி உட்கார்ந்தா...அப்புறமா எழும்பரது மதியம் 2.00 மணிக்கு மேல தாங்க.

அதுவர கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா ஜெயா-ல மக்கள் மன்றம், அப்புறமா விஜய்-ல ஏதாவது மொழிமாற்று படம்...
உண்மைலயே ஞாயிறு எனக்கு ஜாலிதான்...

பாவம் பொண்டாட்டி பிள்ளைங்க தான், வெளில போவோம் வெளில போவோம்னு நச்சரிப்பாங்க...நம்ம அதிஷ்டம் நம்ம அண்ணாச்சி வானம் மப்பும் மந்தாரமுமா இருந்தா தப்பிச்சுக்க ஏதுவாயிடும்.

இல்லாட்டியும் ஒண்ணும் கெட்டுப்போயிடாது...ஜாலியா பைக்ல ஒரு வீதி உலாதான்...

இன்னைக்கு அதிஷ்டம் நம்ம பக்கம். மதியம் வானம் நான் இப்ப கக்கட்டா அல்லது கொஞ்சம் நேரம் கழிச்சு மழைய கக்கட்டாண்ணு கேட்பது போல் இருந்தது.

அதனால இன்னைக்கு வீடேகதிதானுங்க...

அதனால மதியம் வீட்டின் பின் பக்கம் செடிகள் ஏதாவது நட்டு வைக்கலாமுண்ணு சின்ன ஆசை. வீட்டின் பின்பக்கம் சென்று செம்பருத்தி செடியில் இரண்டு மூன்று கம்புகள் ஒடித்து பதியம் வைக்கலாமுண்ணு உட்கார்ந்தேன்...

நம்ம அண்ணனுங்களுக்கு எப்படி மூக்கு வேர்த்ததுண்ணு தெரியல்ல...அதான் சொன்னேனுங்கல்ல... நமக்கு நண்பர்கள் ஜாஸ்திண்ணு... அதே நண்பர்கள் தான்.

சுத்தி சுத்தி வந்து ஒரே பாட்டு...

நேரம் போகப்போக எனக்கு பயங்கரமா எரிச்சல்...

சுத்தி சுத்தி நாலஞ்சு அடி...

பாவம்... நாலஞ்சு பேரு செத்துட்டானுங்க(அவன்/அவள் எப்படி எடுத்துக்கிட்டாலும் சரிதாங்க)...

அப்புறமா கொஞ்ச நேரத்துக்கு தொந்தரவு இல்ல. கொஞ்ச நேரத்துக்குப் பின்னாடி மீண்டும் அதே தொந்தரவு.

யாரப்பா அந்த நண்பர்கள்னு கேட்கரீங்களா?...

வேர யாரும் இல்லங்க நம்ம கொசு தான்...

மன்னிச்சிடுங்க...

நம்ம அண்ணாச்சி நம்ம மேல உட்கார்ந்து எப்படி சூடான இரத்த பானம் உரிஞ்சி குடித்ததுவிட்டு செல்கின்றார் என்று பாக்கரீங்களா?!...

என் ஆசை விபரீதமானது என்று எனக்கு தெரியும்.
ஆனாலும் சின்னதாக ஒரு தைரியம்.
ஏற்கனவே சிக்கன் குனியா வந்து போய்விட்டது. அதனால் இனி வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் இல்லை என்ற தைரியத்தால் துணிந்தேன்.

இவ்வளவு பில்டப் வேண்டாமோ...

சரி சரி காசா? பணமா? பில்டப்புக்கு...

படத்தப் பாருங்க...


நண்பர் இப்பத்தாங்க மெல்லமா இடது முளங்கையில் வந்து உட்கார்ந்து ஊசிய மெல்ல குத்தராரு. வலிக்கத்தான் செய்யுது என்ன செய்யரது... அடிக்கலாம் செத்துப் பூடுவாரே. அப்புரம் எப்படி படம் எடுக்கரதாம்...


ஊசிய நல்லா குத்திட்டாருங்க...வலி போயே போச்சு....


பாருந்க வயிரு கொஞ்சம் நிரம்பிட்டு...ஆனா ஆசை தான் விட்டபாடில்லை...


நல்லா வயிரு நிரம்பிட்டு...ஆனாலும் விட மாட்டேன்கிறாறு...நமக்கும் விரட்ட மனம் இல்ல. குடிக்க விட்டாச்சு குடிக்கிறது வர குடிக்கட்டும். அதையும் தான் பார்ப்போமே...


அப்பாடா...பரம திருப்திண்ணு நினைக்கிறேன். நல்லா குடிச்சிட்டு ஊசிய மெல்லமா எடுக்கறாரு...

அடச்ச...அடுத்தப் படம் எடுக்கறதுக்குள்ள பறந்துட்டாருங்க...

ஃஃஃ