/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

தாமிரபரணி

இது பாதம் பயணித்த...பயணிக்கும்...பயணிக்க... வேண்டிய பாதை...

My Photo
Name:
Location: திருநெல்வேலி, தமிழ் நாடு, India

பிறந்தது:- சிவஞானபுரம். வளர்ந்தது:- ஆவரைகுளம். பொழுது கழிந்தது:- மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்த என் காணியாறு விளை. தற்போது:- காவிரிக்கரை.

Monday, October 08, 2007

ஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1

என்னங்க... அது என்ன தலைப்பு ஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... என்கின்றீர்களா?!...

அது ஒரு சுவாரஸ்யமான கதை. சின்ன வயது ஞாபகங்களை அசைபோட்டு பார்ப்பது சுவாரஸ்யம் நிரைந்தது தானே...

அந்த வகையில் இது எனக்கு மிகவும் சுவாரஸ்யம் நிறைந்த ஒன்று.

வாழ்க்கையில் நாம் அன்றாடம் சத்திக்கும் எத்தனையோ நிகழ்வுகள் மறந்து போகின்றது. நேற்றைய நிகழ்வுகள் கூட இன்று மறப்பது சகஜம். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் சற்று நேரத்திற்கு முன் நடந்த நிகழ்வுகள் கூட பல நேரங்களில் மறந்து விடுகின்றது.

ஆனால் வாழ்க்கையில் மொட்டுக்களாய் அரும்பிக்கொண்டிருந்த வேளையில் நடந்த நிகழ்வுகள் இன்னும் பசுமரத்தில் அடித்த ஆணிபோல் செப்புத்தகட்டில் பொறித்த எழுத்துக்கள் போல் வெள்ளித்திரையாக இன்னும் மனதில் நினைவில் தேங்கி நின்று திகைக்க வைக்கின்றதே! இதை என்னவென்று உரைப்பது. இந்த நினைவுகளின் சுவடுகள் என்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றே நினைக்கின்றேன்.

அந்த நினைவுகளின் சுவடுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் எனக்குள் என்னையே நான் உற்று நோக்குவதை மகிழ்வாகவே நினைக்கின்றேன்.

அடுத்த பதிவில் பார்ப்போமா ஸ்டீபன் ஆசிரியரையும்…பீச்சாளி சந்திரனையும்...