/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

தாமிரபரணி

இது பாதம் பயணித்த...பயணிக்கும்...பயணிக்க... வேண்டிய பாதை...

My Photo
Name:
Location: திருநெல்வேலி, தமிழ் நாடு, India

பிறந்தது:- சிவஞானபுரம். வளர்ந்தது:- ஆவரைகுளம். பொழுது கழிந்தது:- மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்த என் காணியாறு விளை. தற்போது:- காவிரிக்கரை.

Friday, August 18, 2006

சிக்கூன் குனியா...அரசு மெத்தனம் ஏன்?

சிக்கூன் குனியா...
இந்த வார்த்தையை உச்சரிக்காத தமிழ் உள்ளங்கள் மிகக்குறைவு.

இந்த வார்த்தையைக் கேட்ட உடன் ஒரு நிமிடம் உரைந்து போகாத கிராமத்து அப்பாவிகள் அதைவிட மிகக்குறைவு.

அதேபோல் இந்த வார்த்தையைப்பற்றி பசப்பல் வார்த்தைகளை உதிர்க்காத அரசியல் வாதிகளும், மாவட்ட ஆட்சித்தலைவர்களும் மிக அரிது.

ஆச்சரியமான, ஆனால் வெட்கி தலை குனிய வேண்டிய உண்மையும் ஒன்று உள்ளது. அது சிக்கூன் குனியா என்றால் என்னவென்று முழுவதுமாக அறிந்திராத மருத்துவர்கள்.

தமிழகத்தின் தென் மாவட்டத்து மக்கள் இந்த நோயின் பிடியில் சிக்கி தவித்துக்கொண்டும், தாங்களே தள்ளாடித் தள்ளாடி கரையேறிக்கொண்டும் இருக்கின்றார்கன்.

ஆனால் நோயைக்கட்டுப்படுத்த வேண்டிய அரசும் அரசு எந்திரங்களும் நோயைப்பற்றிய உண்மைகளை மறைப்பதிலேயே காலத்தை விரையம் செய்துகொண்டிருக்கின்றன.

புத்திசாலிகளான தென்மாவட்டத்தைச்சார்ந்த பல மருத்துவர்களோ தங்கள் வியாபாரத்தில் நல்ல அறுவடையை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

சிக்கூன் குனியா அவ்வளவு கொடிய நோயா? என்றால் அதுவும் உண்மைதான். ஆனால் அரசு அஞ்சி நடுங்கி உண்மைகளை மறைக்கும் அளவுக்கு உயிர் போக்கும் கொடிய நோய் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

என் அனுபவத்திலிருந்தும் நான் விசாரித்த பல நூறு சிக்கூன் குனியா பாதித்த நோயாளிகள் சொன்ன விபரங்களிலிருந்தும், நோயைப்பற்றிய சில உண்மைகள், "சிக்கூன் குனியாவினால் பாதிக்கப்படுபவர்கள் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை கடுமையான ஜூரத்திற்கு உட்படுகின்றார்கள், கூடவே உடலில் உள்ள அத்தனை மூட்டுக்களிலும் தாங்க முடியாத வலி. இந்த மூட்டு வலி ஒரு வாரம் முதல் ஆறு மாதம் வரை தொடரலாம். நோய் வாய்ப்பட்டவர் காலைக்கடனை கழிக்கச்செல்ல மற்றவர் துணை தேவைப்படலாம் [இதில் தப்பிப்பிழைப்பவர் உண்மையில் புண்ணியம் தெய்தவராவார்]. பலருக்கு மூட்டு வீக்கமும் ஏற்படுகின்றது. கொஞ்சம் குண்டானவர்கள் பாடுதான் திண்டாட்டம்".

ஆனால் இரண்டு மூன்று நாட்கள் சாதாரண பாராசிட்டகால் மாத்திரை எடுத்துக்கொண்டாலேயே காய்ச்சல் குணமாகிவிடுகிறது. அல்லது ஊசி போட்டுக்கொள்ளலாம் (பாராசிட்டமால் தான்). வலிக்கு ப்ரூபின்(IBUPROFEN) எடுத்துக்கொள்ளலாம். கூடவே ப்ரூபினால் பக்கவிளைவு ஏற்படாமல் இருக்க மாத்திரை சாப்பிடுவதும் உத்தமம்.

சிக்கூன் குனியா பற்றிய உண்மைகள் இவ்வாறு இருக்க அரசின் கையாலாகாத்தனத்தாலும், நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் அரசு ஏற்படுத்த தவறியதாலும் மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய தவறான எண்ணமும் பய உணர்ச்சியுமே மேலோங்கி நிற்கிறது. இது மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய வேண்டாத பீதியையும் கலக்கத்தையுமே ஏற்படுத்துவதுடன் அரசு மீதும் மக்களுக்குள்ள நல்லெண்ணெத்தையும் சீர்குலைப்பதாகவே அமையும். எனவே அரசு இனியேனும் விரைந்து நடவடிக்கை எடுத்து சிக்கூன் குனியா பரவலாக உள்ளதை பெருந்தன்மையோடு ஒத்துக்கொண்டு, அந்நோய் பரவால் தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு, அந்நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியையும் மக்களிடம் ஏற்படுத்த முனைய வேண்டும். இது ஒன்றும் உயிர்க்கொல்லி நோய் இல்லை என்பதையும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

செய்யுமா அரசு. அல்லது மீண்டும் தமிழ் நாட்டில் சிக்கூன் குனியா இல்லை என்ற பழைய பல்லவியையே பாடப்போகின்றார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.

பி.கு:- எங்கள் ஊரில் 95% சதவீதம் பேருக்கு சிக்கூன் குனியா தாக்கியது. எங்கள் குடும்பத்தில் அனைவரையும் நோய் தாக்கியது. அப்பா இறந்த போது(26.07.2006) ஊர் சென்றுவந்த எனக்கும் என் வீட்டிலுள்ள அனைவருக்கும் சிக்கூன் குனியா வந்து இப்போதுதான் குணமடைந்து வருகிறோம்.

2 Comments:

Blogger சத்ரியன் said...

அரசியல் வாதிங்க என்னைக்கு திருந்துறது. பகல்கனவு கண்டு நேரத்த வீணடிக்காதீங்க.

August 20, 2006 12:04 AM  
Blogger Doctor Bruno said...

Please list out what has to be done by the Govt and what has to be done by the Individual before blaming the govt

Let us see how much govt has done and how much the individual is found lacking

நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் அரசு ஏற்படுத்த தவறியதாலும் மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய தவறான எண்ணமும் பய உணர்ச்சியுமே மேலோங்கி நிற்கிறது.

You should note that Kerala is talking about this disease only in October. Only because of the IEC drive Tamilians are aware of this disease.

October 11, 2006 7:46 AM  

Post a Comment

<< Home