/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

தாமிரபரணி

இது பாதம் பயணித்த...பயணிக்கும்...பயணிக்க... வேண்டிய பாதை...

My Photo
Name:
Location: திருநெல்வேலி, தமிழ் நாடு, India

பிறந்தது:- சிவஞானபுரம். வளர்ந்தது:- ஆவரைகுளம். பொழுது கழிந்தது:- மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்த என் காணியாறு விளை. தற்போது:- காவிரிக்கரை.

Wednesday, July 12, 2006

பூனைக்கு யார் மணிகட்டுவது...

1. இன்னும் இந்த மண்ணில் எத்தனை எத்தனை குண்டுவெடிப்புக்கள் நடக்க இருக்கின்றது?!
2. எத்தனை எத்தனை உடல்கள் இன்னும் சதைப்பிண்டங்களாகச் சிதறப்போகின்றது?!
3. இதற்கு தீர்வு தான் என்ன?
4. அரசியல் வாதிகளே என்ன செய்யப் போகின்றீர்கள்?
5. அரசாங்கங்கள் என்ன செய்யப் போகின்றது?
6.பொது மக்களே நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?
7. மதவாதிகளே நீங்கள் தான் என்ன செய்யப்போகின்றீர்கள்?
8. இரத்த தாகம் கொண்ட ஓநாய்களே உங்களின் இலக்கு என்ன?
9. மனிதம் கொன்று மதங்கள் வளர்க்கப் போகின்றீர்களா?
10. கல்லரைகளின் மீது உங்கள் சாம்ராஜ்யம் நிறுவப்போகின்றீர்களா?

கண்ணீர் அஞ்சலி

மும்பை இரயில் தொடர் குண்டுவெடிப்பில் தங்களின் இன்னுயிரைத் துறந்து இறைவனடி சேர்ந்த என் சகோதர சகோதரிகளுக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். அவர் தம் குடும்பத்திற்கு ஆண்டவன் ஆறுதலை வழங்கட்டும்.

முகவுரை

வாழ்க்கையில் ஒவ்வொருவரும்
கடந்துவரும் பாதை
ஒவ்வொறு விதம்.

வாழ்வில் நடைபெரும்
சம்பவங்களிலிருந்தும்
ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவமும்
ஒவ்வொறு விதம்.

தயக்கங்களுக்கு பின்னே
பல மனித மனங்கள்
மறைந்து கொண்டிருக்கின்றது.
இதுவரை
நானும் தயக்கக்கூட்டுக்குள்
ஒழிந்து கொண்டுதானிருந்தேன்.
கூட்டைக்கிழித்து
வண்ணத்துப் பூச்சியாய்
எண்ணமெனும் வானில் சிறகடித்து
என் நினைவு
மரங்களில் இளைப்பார ஆசைதான்.
முடிகிறதா பார்ப்போம்.....